Saturday 4th of May 2024 07:17:37 AM GMT

LANGUAGE - TAMIL
-
வல்வெட்டித்துறை மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்!

வல்வெட்டித்துறை மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்!


அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று குற்றம்சாட்டி இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்ட வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவரும் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 21ஆம் திகதி வல்வெட்டித்துறையிலிருந்து சிறிய ரக மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நிமலதாஸ், கஜீபன் ஆகிய இருவரையும் இந்தியக் கடற்படையினர் பிடித்து நாகபட்டினம் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றிருந்தனர்.

பின்னர் அவர்கள் பொலிஸார் ஊடாக சென்னை எழும்பூர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, வட மாகாணம், சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE